Monthly Archives: திசெம்பர் 2021

உறங்கா விதைகள்

தோட்டம் செய்ய விதைகளை வாங்கி வந்தேன்.நேற்றைய தூறலின் ஈரம் விதைகளுக்கு ரொம்பப்பிடிக்கும்! தூறலுக்கும் விதைகள் மீது பேரார்வம்! மழையெனத்தூறல் விழ, அது நிற்குமோ என நானும் தேநீருடன்! அடுத்த நாள் மழையில்லை! ஆனால் விதைக்க நேரமில்லை! நிகழாத சந்திப்பில் உறைந்த விதைகளும் தூறல்களும்!

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

யாத்ரீகனுக்கு…சில சொற்கள்.. இன்னும்

பின்னோக்கிப்பாயும் நதி இல்லத்தின் எல்லா இடுக்குகளிலும் தேடிவிட்டேன்.கருப்புச்சிலந்தியின் தடம் கூடத்தெரியவில்லை. இதே போல் ஒரு பத்தாண்டுகளுக்கு முன் இருந்த என்னையும் எம் மனதின் ஒரு மூலையிலும் காணவில்லை. இன்று நீ தந்த பணி வந்தது. அதற்கு அந்த ‘நான்’ தான் சரிப்பட்டு வரும். என்ன செய்வேன் யாத்ரீகனே?

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

யாத்ரீகனுக்கு… சில சொற்கள்..

கள்வர் தோல்வி கள்வர் உள்ளே வந்தனர்! அலமாரிகளும் பணப்பெட்டிகளும்என எல்லாவற்றையும் தேடினார்கள்!எனக்கு மிகவும் விலையுயர்ந்த பொருளைக்கவர!என் உள்ளத்தின் ஆழத்தில் நான் பத்திரமாய்ப்பொத்திவைத்த என் பத்து வயது நானின் துடிப்பை அவர்களால் திருட முடியவில்லை! ஆனால் எனக்கும் அவன் கிட்டவில்லை யாத்ரீகனே!

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக